Friday, 28 March 2014

சிறுகதை ஆடுத்த ரவுண்ட்


அடுத்த ரவுண்டு உனக்குத்தான்.

செல்லையா எனும் பெரியவர் ஒருவர்.எல்லா வசதிகளும் வீட்டில் உண்டு..ஆனால்--எதுவுமே கிடையாது அவருக்கு.அது என்ன?என்று கேட்பதற்கு விடு கதை அல்ல இது. உண்மையைத்தான் சொல்கிறேன்

ஒரே ஒரு பிள்ளைதான் அவருக்கு. உயர்வாகப்படிக்க வைத்தார் உத்யோகமும் கிடைக்கஉதவினார்..
மற்றெல்லாம் பெண்மக்கள்
ஆண் வாரிசே ஆளட்டும் என்றே அத்தனை சொத்துக்களையும் அவனுக்கே எழுதி வைத்தார்.

எழுதி வாங்கும் வரை ஏந்தி ஏந்தித் தாங்கினாள் மருமகள்..கைகுள் வந்ததும் கதவைச் சாத்திவிட்டாள்.சாப்பாடு இல்லை- பாவம்சந்திக்கு வந்துவிட்டார்.ஓய்வூதியம் பெறுவதால் ஓட்டல் சாப்பாடு வருகிறது..அதுவும் இல்லாதவர் கதியென்ன?

மகனும் கண்டு கொள்வத்தில்லை. பாவம் அவன் என்ன செய்வான் மனைவிக்கு அடங்கிய மணவாளன்.இவர்களுக்கும் ஒரு மகனிருக்கிறான்இந்தக் காட்சிகளையெல்லாம்-அவன் கூர்ந்து கவனமாகபார்த்துக் கொண்டுதானிருக்கிறான்.

இப்போதுதான் பாட்டி சொன்ன கதைஒன்று நினைவுக்கு
வருகிறது.வயதான மாமியாரை மதிக்காத மருமகள் ஒருத்தி இருந்ததாளாம்..மாமியாரை தொழுவத்திலே போட்டு மண் சட்டியொன்றில் பிச்சைக்காரிக்குப் போடுவதுபோல் மீந்து போன பழைய கஞ்சியைத்தான் ஊத்துவாளாம்.பாவம் அந்தக் கிழவி யொருநாள் குளிரால்வாடி இறந்தும் போனாளாம்.இதையெல்லாம் கவனித்துக் கொண்டேஇருந்த அவளுடைய பிள்ளை ஓடோடிச் சென்று அந்த ஓட்டைமண் சட்டியை பத்திரமாக ஒளித்து வைத்தானாம் அப்போது அந்த தாய் கேட்டாளாம்.

"இந்த அசிங்கம் பிடிச்ச சட்டியைத் தூரே எறியாமல் எதுக்காகப் பத்திரப்படுத்து
கிறாய்"என்று.அதற்கு அநதச் சிறுவன் ---."அடுத்த ரவண்டு உனக்கு வேணுமே அதற்காகத்தான் பத்திரப்படுத்துகிறேன்"என்றானாம்.

இன்று நீ எதை விதைக்கிறாயோ அதுவே நாளை உனக்கே விளையும்.என்றுமே இளமை உனக்குச் சொந்தமில்லை.நாளை முதுமை உனக்கும் வரும்.

கொ.பெ.பி.அய்யா.

அடுத்த ரவுண்டு உனக்குத்தான்.

செல்லையா எனும் பெரியவர் ஒருவர்.எல்லா வசதிகளும் வீட்டில் உண்டு..ஆனால்--எதுவுமே கிடையாது அவருக்கு.அது என்ன?என்று கேட்பதற்கு விடு கதை அல்ல இது. உண்மையைத்தான் சொல்கிறேன்

ஒரே ஒரு பிள்ளைதான் அவருக்குன் உயர்வாகப்படிக்கவைத்தார்உத்யோகமும் கிடைக்க உதவினார்..மற்றெல்லாம் பெண்மக்கள்.ஆண் வாரிசே ஆளட்டும் என்றேஅத்தனை சொத்துக்களையும் அவனுக்கே எழுதி வைத்தார்.

எழுதி வாங்கும் வரை ஏந்தி ஏந்தித் தாங்கினாள் மருமகள்..கைகுள் வந்ததும் கதவைச் சாத்திவிட்டாள்.சாப்பாடு இல்லை- பாவம்சந்திக்கு வந்துவிட்டார்.ஓய்வூதியம் பெறுவதால் ஓட்டல் சாப்பாடு வருகிறது..அதுவும் இல்லாதவர் கதியென்ன?

மகனும் கண்டு கொள்வத்தில்லை பாவம் அவன் என்ன செய்வான் மனைவிக்கு அடங்கிய மணவாளன்.இவர்களுக்கும் ஒரு மகனிருக்கிறான்இந்தக் காட்சிகளையெல்லாம்-அவன் கூர்ந்து கவனமாகபார்த்துக் கொண்டுதானிருக்கிறான்.

இப்போதுதான் பாட்டி சொன்ன கதை ஒன்று நினைவுக்குவருகிறது.வயதான மாமியாரை மதிக்காத மருமகள் ஒருத்தி இருந்ததாளாம்..மாமியாரை தொழுவத்திலே போட்டு மண் சட்டியொன்றில் பிச்சைக்காரிக்குப் போடுவதுபோல் மீந்து போன பழைய கஞ்சியைத்தான் ஊத்துவாளாம்.பாவம் அந்தக் கிழவியொருநாள் குளிரால்வாடி இறந்தும் போனாளாம்.இதையெல்லாம் கவனித்துக் கொண்டேஇருந்த அவளுடைய பிள்ளை ஓடோடிச் சென்று அந்த ஓட்டைமண் சட்டியை பத்திரமா ஒளித்து வைத்தானாம் அப்போது அந்த தாய் கேட்டாளாம்.

"இந்த அசிங்கம் பிடிச்ச சட்டியைத் தூரே எறியாமல் எதுக்காகப் பத்திரப்படுத்துகிறாய்"என்று.அதற்கு அநதச் சிறுவன் ---."அடுத்த ரவண்டு உனக்கு வேணுமே அதற்காகத்தான் பத்திரப்படுத்துகிறேன்"என்றானாம்.

இன்று நீ எதை விதைக்கிறாயோ அதுவே நாளை உனக்கே விளையும்.என்றுமே இளமை உனக்குச் சொந்தமில்லை.நாளை முதுமை உனக்கும் வரும்.

கொ.பெ.பி.அய்யா.

பாவம் சலூன்கார் கதை


பாவம் அந்தத் தொழிலாளி.....

(சிறுகதை)

சிகை அலங்கார நிலையம் ஒன்றிற்கு சிகை அலங்காரம்செய்து கொள்ளச்

சென்றிருந்தேன்.எனக்கு முன்பாக ஒருவர் அலங்காரம் முடிந்து இறங்கினார்.

அலங்கார வேலை செய்தவர்க்கு அறுபது ரூபாய் கூலி கொடுக்கவேண்டுமே.]

பணம் எடுப்பதற்காக வேக வேகமாக அவசரக் கோலத்தில் தன் சட்டைப் பைக்குள்

ஆழம் உள்ளவரை விரல்களை விட்டுத் தேடினார.விரல்களென்ன வித்தையா

பயின்றுள்ளத இல்லாத ஒன்றை இருப்பதாக்க் காட்டுவதற்கு!

எதுவுமே கிடைக்க வில்லை.விரல்கள் மட்டும் மூச்சுத்திணறிவெளியே பிழைத்து

வந்தன.அப்பறம் அழகாகச் சொன்னார்.

"ஐய்யய்யோ சட்டையை மாற்றிப்போட்டு வந்து விட்டேனே........

இப்படித்தாங்க அடிக்கடி அவசரத்தில் எதையாவதுஎடுத்துக் கோர்த்துக்கிட்டு

வநதிடுறேன்.வர வர ஞாபக மறதியும் சாஸ்தியாயிருச்சி.எவ்வளவு அசிங்கமாப்

போச்சுபாருங்க.தயவு செய்து தப்பா நினைக்காதீஙக.இதோஐந்து நிமிடத்தில்

வந்து விடுகிறேன்" என்று அன்று பறந்தவர்தான்

இன்று வரைக்கும்ம் வரவே இல்லையாம்..ஹூம்.............ஏமாற்றும் வித்தைகளைச்

செய்வதற்குஎப்படியெல்லாம் பிட்டப் போடுறாங்க பாருங்க..

பாவம் அந்தத் தொழிலாளி!"பரவாயில்லங்க வீட்டுக்குப்போய்ட்டு வாங்க"என்று

கூறி நம்பி வழி அனுப்பி வைத்தவர் இன்னும் எத்தனை நாட்கள்தான்

எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்!

கொ.பெ.பி.அய்யா.

 

கரிசல் காவியம் 20


கரிசல் மண்ணில் ஒரு காவியம் 2௦

 

அத்தியாயம் 2௦

 

கமலாவிற்காக இன்று பாடசாலையில் கோலாகல வரவேற்பும் கொண்டாட்டமும் பள்ளியில் நிறைந்து காணப்பட்டது.முதலாவது சுதந்திர விழாப்போல் வகுப்பறைகள் எல்லாம் பரபரப்பாக இருந்தன.அவளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணமாக நிறைந்தன.இந்த நாள் அவளின் திருப்புமுனை நாளாக எண்ணி அவள் மனது மகிழ்ச்சியில் பொங்கிவழிந்தது.நல்ல பொழுதாய் விடிந்த இந்த நன்னாளை தனது வரலாற்றில் ஒரு பொன்னாளாய் பதித்துக்கொண்ட அவள் பள்ளி வேளை முடிந்து வீட்டுக்குத் திரும்பத் தயாராகி வாசலில் ராஜாவிற்காகக் காத்திருக்கிறாள்.

 

ராஜாவும் வருகிறான்.”என்ன நிக்கிற வீட்டுக்குப் போகல”எனக் கேட்கிறான்.அம்மா சொன்ன ஆலோசனைகள் அவன் நினைவுக்கு வருகின்றன,அன்னையின் அறிவுமொழிகள் சரிதான் என அவனுக்குத் தோன்றியதால் கமலாவுடன் செல்ல அவன் யோசிக்கிறான்.

 

“என்ன யோசனை ராஜா?”என அவன் வித்தியாசமான முகக்குறிகளைக் கவனித்துக் கேட்கிறாள்..சுதாரித்துக்கொண்ட ராஜா,”அதெல்லாம் ஒன்றுமில்லை”என சமாளிக்கிறான்.

“ஒன்றுமில்லை என்கிறாய் அப்புறம் ஏன் என் முகத்தப்பாக்கப் பயப்புடுற.என்ன பயமா?யாராவது ஏதாவது சொல்லுவாங்கன்னு யோசிக்கிறியா”என அச்சம் தவிர்த்தவளாய் பேசினாள்.

இந்த கேள்விக்கு ஆமா என தலையாட்டி தன்னை ஒரு கோழையாக அவள் முன் அடையாளம் காட்டிக்கொள்ளவும் துணியாதவனாய்:யாருக்காகவும் எதற்காகவும் நான் ஏன் அஞ்சவேண்டும் என தன்னை அஞ்சா நெஞ்சனாக நெஞ்சை நிமிர்த்தி அவளுடன் செல்ல ஆண்சிங்கமாக சிலிர்துக்கொள்ளவும் அவசரம் இல்லாதவனாய் இருதலைக் கொள்ளி எறும்பாக அசைவற்று நின்றான்.

 

புரிந்துகொண்டாள் கமலா.”சரி நீ ரொம்ப யோசிக்கிற.இப்படியே நின்னுக்கிட்டே யோசிக்கப் போறியா?எதுவானாலும் இங்கயே யோசிச்சு முடிச்சிரு.நடந்துக்கிட்டே யோசிக்கிறது ஆபத்துப்பா.ஏன்னா பாதையில பள்ளம் மேடு இருக்கும்.வண்டிகள் போகும் வரும்.பாதையில கவனம் மாறுனா பயணம் அபாயம்பா.அதனால நல்லா நிதானமா நின்னு யோசிச்சுட்டு வீட்டுக்குப் போப்பா.பயந்தாங்கொல்லி....... .பயந்தாங்கொல்லி.”என அவனைக் கோழையாக்கி விட்டு அவள் தைரிய லட்சுமியாய் நடையைக் கட்டினாள்.

 

இந்தக் காட்சியைக் கண்ட சக மாணவர்கள் சும்மா இருப்பார்களா என்ன!.கமாலாவின் வீர வசனத்தைக் கேட்டு கை தட்டி ஆர்பரித்தார்கள்.திடுக்கிட்டுப்போன ராஜா வெட்கத்தால் தலை கவிழ்ந்தான்.அதிலே ஒரு தன்மானச்சிங்கம். ராஜாவின் தாழ்ந்த சிரத்தை நிமிர்த்தினான்.

“ராஜாவின் தலை எப்போதும் கவிழக்கூடாது.அவளோடு இணைந்து போனால்தானே பிரச்சனை அவள் முன்னாலயே போகட்டும்.நாம் பின்னாலயே போவோம்.வாடா வா”என ராஜாவின் முதுகைத் தட்டி அவளின் பின் அழைத்துச்சென்றனர்.

 

கமலா சற்று சில அடிகள் தூரத்தில் முந்தியும்.ராஜாவும் அவன் நண்பர்கள் கொஞ்சம் பிந்தியும் அதாவது சீதைக்குப் பின்னால் ராம சகோதரர்கள் பின் தொடர்வதுபோல் இருந்தது அந்தக் காட்சி.திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சத்தமில்லாச்சின்னச்சிரிப்பு செய்துகொண்டு பெண்ணுக்கே உரிய அழகு நடை நடந்து சென்று கொண்டிருந்தாள்.

 

போகும் வழியில் ஒரு ஓடைப்பாலம்.அதில் உட்கார்ந்துகொண்டு போகிற வருகிற இளம் பெண்களை கேலிகிண்டல்.நையாண்டி,நக்கல் அடித்துக்கொண்டிருந்தார்கள் அர்த்தமில்லா சில அற்பர்கள்.இதெல்லாம் வாடிக்கைதானே என அதைப் பொருட்படுத்தாமல் அவர்களின் கூத்துக் கோமாளித்தனமான சொற்களை காதில் போட்டுக்கொள்ளாமல் அவர்களைக் கடந்துகொண்டிருந்தாள்.அப்போது அதிலும் ஒரு நெஞ்சழுத்தக்காரன்.”நேத்துப் பூத்தாளே ரோசாமொட்டு....பறிக்கக் கூடாதோ லேசாத் தொட்டு.”என அவளைப் பார்த்துப் பட்டுப்பாடிக்கொண்டே ஆட்டமும் போட்டான்.அதைக்கண்டு கொள்ளாத கமலா மேலும் தன் நடையைத் தொடர்ந்தாள்.      

 

“அடடே அதோ பார்ரா ராஜா பின்னால படையோட பாது காப்பா வாராரு. ராணியம்மா பத்திரமா பவணி போறாக.இது எப்படி இருக்கு.?”என நையாண்டி செய்தான்.அதற்கு அவன் உடனிருந்த அற்பர்கள்,”சூப்பரு”என ஒத்திசைத்தார்கள்.

 

கமலா தன் செருப்பைக் கழட்டினாள்.”பொறுக்கிப் பயல்களா....உங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சிகளே இல்லையாடா அயோக்ய நாய்ங்களா...வேல வெட்டி இல்லாத வெட்டிக் கழுதைங்க......இவா பொட்டச்சிதானன்னு அற்பமா நினச்சிங்களோ! அற்பப்புழுக்களா!......மத்த பொண்ணுக்கிட்ட ஆட்ன வால எங்கிட்ட ஆட்டலாமுன்னு நினைச்சேங்க அறுத்துருவேங் அறுத்து ஜாக்கிரத.....!”எனக் கழட்டிய செருப்பை சுழட்டி வீசினாள்.அவ்வளவுதான் அதற்கு மேலும் அங்கிருந்தால் ஆபத்து என உணர்ந்த அந்த அசிங்கப்பிறவிகள் ஓட ஆரம்பித்தார்கள்.

வீசியெறிந்த செருப்பை தன் காலில் திரும்பவும் மாட்டிக்கொண்டு வீர நாச்சியாராய் வெற்றி நடை போட்டாள் வீரமங்கை கமலா.

 

அவளை வைத்துக்கொண்டு பிரச்சனைக்குள் நுழையக்கூடாது என பொறுமை காத்த ராஜாவும் அவன் நண்பர்களும்.அவள் அவ்விடம் விட்டுக்கடந்ததும்.கலைந்து ஓட முயன்ற அந்த சாக்கடைக் கிருமிகளை மடக்கிப் பிடித்தார்கள்.

 

“ஏண்டா விசப்பூச்சிகளா.......உங்களுக்கு இதே வேலையாப் போச்சுல்ல..தெண்ட சோறு திங்கிற நாயுங்க....உங்களுக்குப் பொழுது போகலையின்னா பொழைக்கிற வழியப்பாத்து ஏதாவது வேல செஞ்சி அப்பன் ஆத்தா அக்கா தங்கச்சிங்களக் காப்பாத்துங்கடா.கல்யாண ஆச வந்தா ஏதாவது பொட்டக்கழுதையாப்பாத்துக் கட்டிக்கிட்டு மேக்க வேண்டியதுதானடா.ஏண்டா இப்படிப் படிக்க வாற பொண்ணுங்கள பாழாக்கப் பாக்குறீங்க பாவிங்களா.!......அட சண்டாளங்களா!உங்களப்போல அலையிற நச்சுப்பாம்புகளுக்குப் பயந்துக்கிட்டு தானடா பொண்ணுங்களப் பெத்தவங்க பொண்ணுங்களப் படிக்க அனுப்புறதுக்கே பயந்துக்கிட்டு வீட்டுக்குள்ளயே பூட்டி வைக்கனுமுன்னு நினைக்கிறாங்க.இப்பத்தான் ஒண்ணு ரெண்டு பொண்ணுங்களப் படிக்க வைக்க அனுப்புறாங்க.அதையும் கெடுத்துப் பழையபடியும் அவங்கள வீட்டுக்குள்ள அடைச்சிப் பூட்டுப்போட வச்சுருவீங்க போலிருக்க.நீசங்களா!.உங்களையெல்லாம் விட்டுவைக்கக் கூடாதுடா.எது உங்களச்சீண்டிவிடுதோ அத அறுத்துட்டா அப்புறம் இப்படிச்செய்யவேண்டிய அவசியம் இருக்காதுல்ல.....டேய் எடுறா அந்த பிளேட அறுத்துறலாம்”என ராஜா சொன்னவுடன் அவன் நண்பர்கள் அந்தக் கொடியவர்களைக் கீழே தள்ளிக் கிடத்தி பைகளுக்குள்ளிருந்து ஆளுக்கொரு பிளேடை எடுத்து கட்டுப்பாடு அறுவை சகிச்சை செய்யத் துணிந்தார்கள்.அவ்வளவுதான்.அந்த வீணர்கள் பயத்தில் அழுது ஓலமிட்டார்கள்.”தம்பிகளா நாங்க இனிமே இந்தப்பக்கமே தலை வைத்தும் படுக்கமாட்டோம்.நீங்க நல்லா இருப்பீங்க எங்கள விட்டுடுங்க உங்களுக்குக் கோடிப்புண்ணியம்.நீங்க சொன்னமாதிரி ஏதாவது வேலைவெட்டி தேடி வெளி ஊருக்காவது ஓடிப்போயிருறோம்”என அலறித்துடித்து ஒப்பாரியிட்டார்கள்`

 

‘இல்ல இல்ல அது இருந்தாதான உங்களுக்குத் தொல்ல.நீங்க சும்மா இருந்தாலும் அது உங்கள சும்மா இருக்க விடாது.பயப்புடாதீங்க வலியில்லாமக் கட் பண்ணியிறலாம்.....புடிங்கடா”மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கத்தியை எடுத்தார்கள்.

 

“அய்யய்யோ ஒண்ணு சேர்ந்துட்டாங்கப்பா...நம்மள விடமாட்டாங்கப்பா......அய்யா சாமிங்களா நாங்க இன்னுமே இந்த ஊர்லயே இருக்கல எங்கயாவது கண்காணாத இடமாப் பாத்து ஓடிப் போயிடுறோம். எங்கள விட்டுடுங்க”எனக் கைகூப்பி வணங்கி காலில் விழுந்து அழுது தொழுதார்கள்.

 

“சரி அப்படின்னா ஒண்ணு செய்யலாம் உங்கள எல்லாத்தையும் போலீசுல ஒப்படச்சிடுறோம்.அப்பத்தான அவங்க உங்களக் கண்காணிச்சிக்கிட்டு இருப்பாங்க.உங்க பேரையும் அவங்க பத்திரமா எழுதி வச்ச்சுக்குவாகல்ல....வாங்க வாங்க “என அத்தனை பேரையும் பத்திரமாக அடித்து இழுத்துக்கொண்டுபோய் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒட்டு மொத்தமாக ஒப்படைத்தார்கள்.அந்தக் காலக்கட்டத்தில் குற்றவாளிகளுக்கு காவல் நிலையம் என்றாலே சிம்ம சொப்பனம்.காவல் என்று சொன்னாலே கால்டவுசர் நனைந்து விடும். 

.         .

(தொடரும்)

 

கொ`பெ`பி`அய்யா`

 

    .

 

 

கரிசல் காவியம் 19


கரிசல் மண்ணில் ஒரு காவியம்19

அத்தியாயம் 19

வெற்றி நடை பொட்டு நேர் கொண்ட பார்வையுடன் மனதில் எதிர்காலக் கடமைகளைச்சுமந்தவளாய்ப் பாடசாலைக்குச்செல்கிறாள் கமலா.ஊரின் கண்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான பார்வையில் அவளை விசாரிக்கின்றன,

“என்ன கமலா இன்றுமுதல் உனக்கு விடுதலையா?”என வினவும் புது மலர்ச்சி காணத்தேடும் புதுமை நாடும் கண்கள் சில.

“மீண்டும் கல்வி கற்கச்செல்கிறாயா?”எனக் கேட்டு வரவேற்று அறியாமை இருள் நீங்காதா! என ஏங்கும் விழிகள் சில.

“காலம் மாறிவிட்டதா?”என வியந்து விரியும் பார்வைகள் சில.

“பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தானா?”எனப் போற்றிமகிழும் புதிய சிந்தனைக்குக் காத்திருக்கும் கண்கள் சில.

“ம்ம்ம்ம் பொட்டக்கோழி கூவி பொழுது விடியரொஒன
னனவா போகிறது?”என வினவும் பத்தாம் பசலித்தனமான பாவ விழிகள் பல.

இப்படிப் பலப்பல விதமான பார்வைகளைக் கடந்து அவள் பள்ளிக்கூடம் நோக்கிய தன் பயணத்தைத் தொடர்கிறாள்.

கமலா இன்று பள்ளிக்கு மீண்டும் வருகிறாள் என்பதை அறிந்த அவளுடைய தோழமைகள் அவளை வரவேற்க பள்ளி வாசலில் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

“அதோ வருகிறாள் கமலா இதோ வந்துவிட்டாள் கமலா.மாதர்குல மாணிக்கம் வருகிறாள்,எதிர்கால இளைய தலைமுறையின் விடிவெள்ளி வருகிறாள்.நாகரிக வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரம் வருகிறாள். அடிமைத்தளை அறுத்த அற்புதப் பெண்ணவள் வருகிறாள்.பாரதியை சுமந்து வருகிறாள்.பகலவன் பெரியாரை ஏந்தி வருகிறாள்.சுயமரியாதை சொன்ன அதிசய மனிதர்களின் கனவுகளின் நிசமாய் வருகிறாள்”என வாசலில் கூடி நின்ற மாணவக் கண்மணிகள் சுதந்திரக் காற்றை சுவாசித்தவர்களாய் உற்சாக ஒலி எழுப்பிக்கொண்டு ஆரவாரத்தோடு கமலாவை புத்துணர்வோடு வரவேற்று வகுப்பறைக்குள் அழைத்துச்செல்கிறார்கள் ஆர்வம் கொண்ட சக நண்பர்கள்.

அத்தனை அன்பு வரவேற்பையும் வெற்றிக்களிப்போடு ஏற்றுக்கொண்ட கமலா.முதலில் தலைமை ஆசிரியரைச்சந்திக்கச்செல்கிறாள்.அதிகமாக ஆரவாரம் காட்டிக்கொள்ளாமல் அடக்கி வாசிக்கும் ராசா அவளுக்கு முன்பாகவே அவன் தலைமை ஆசிரியர் அறையில் இங்குதான் வருவாள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறான்.அவன் பள்ளியின் முதல் மாணவன் என்பதால் அவனுக்குத் தலைமை ஆசிரியரிடமும் ஏனைய ஆசிரியர்களிடமும் அவனுக்கு நல்ல வரவேற்பு உண்டு.ஆகவே ராசாவின் முயற்சிக்கு ஆசிரியப்பெருமக்கள் உறுதுணையாக இருந்தார்கள்.இந்த வெற்றியில் ராசாவுக்கும் முக்கியப்பங்கு உண்டு என்பதால் அவனையும் ஆசிரிய மற்றும் மாணவ சமுதாயங்கள் மனம் உவந்து பாராட்டிக்கொண்டிருந்தன,

கமலா வருவதைக்கண்ட ராசா ஆனந்தக் களிப்பில் தன் மெல்லிய புன்னகையால் வரவேற்கிறான்.அவள் தன் நன்றியை கைகளைக் கூப்பி கண்களில் பெண்விடுதலை வெற்றிக் கண்ணீர் நிறப்பி ஆராதிக்கிறாள்.

“வாழ்க நீ “என தன் பூரிக்கும் விழிகள் பொங்க வாழ்த்துகிறான்.கமலா தலைமை ஆசிரியரின் அறைக்குள் கைகள் கூப்பி வணங்கிய வண்ணம் சென்று அவருடைய பாதங்களில் பணிந்து ஆசிர்வாதம் பெறுகிறாள்.கமலாவை தன் இருகரங்களால் தூக்கி நிறுத்தி விழிகளை துடைத்துவிட்டு ஒரு மகளிடம் ஒரு தந்தை காட்டும் பாசமாகப் பரிமாறிக்கொள்கிறார்.

“நல்லது.நீ எதை நினைத்தாயோ அதில் உறுதியாக நின்று சாதித்துவிட்டாய்.உன் சாதனை இன்றைய பெண்குலத்திற்கு ஒரு தூண்டலாக இருக்கட்டும்.இனி எதிர்காலப் பெண்ணினம் விழித்துக்கொள்ளும்.நீ ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தாலும் எதிர் கால உலகில் உனக்கும் உரிய கடமைகள் உண்டு என்பதை நீ உணர்ந்து கொண்டதால்தான் உன்னை நீயே தட்டி எழுப்பிக்கொண்டாய்.
உனக்குள் எழுந்த அந்த உணர்வுத் தூண்டல்களுக்கு எழுத்துக்களைத் தந்து வாழும் மகான்களை நீ மனதில் எண்ணிக்கொள்.அவர்கள் உனக்கு ஒளியாக ஒளிர்ந்து உனக்குள் வழி காட்டுவார்கள்.பெரியவர்கள் கண்ட கனவிற்கு இன்று நீ விடையாகி விளங்குகின்றாய்.
உன்னுடைய எழுச்சியும் துணிவும் எதிர் காலத்திற்கு ஒரு சவாலாக விளங்கட்டும்.இப்போது எனக்குள்ளும் ஒரு நம்பிக்கை பிறந்துவிட்டது.இனி பெண்மை பழமைக்குள் மயங்கிக் கிடந்து மங்கிவிடாது.மீண்டும ஆண்டாள்கள், ஔவைகள்,சரோஜினிகள்,நாச்சியார்கள்,லட்சுமிபாய்கள்,மங்கையர்கரசிகள் போன்ற அதிசயப் பெண்குலம் தோன்றி இவ்வையம் சம உரிமையுடன் வாழ முன்னோடி வழி காட்டும்.நீயும் இந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் ஒரு அங்கம் வகிக்க வேண்டும் என நான் என் மனதார வாழ்த்துகிறேன்.வாழ்க!என வாழ்த்தி,”

“ராசா!கமலாவை வகுப்பறைக்கு கூட்டிட்டுப்போ” என கட்டளையிட ராசா கமலாவை வகுப்பறைக்கு வழிகாட்டி அழைத்துச்செல்கிறான்.

(தொடரும்)

கொ.பெ.பி.அய்யா.

Friday, 14 March 2014

கரிசல்காவியம் 17

கரிசல் மண்ணில் ஒரு காவியம்17

அத்தியாயம் 17

கூண்டுக்கிளி ஒன்று விடுதலை பெற்று அது தன் சிறகுகளை விரித்து ஆனந்தமாக விண்ணில் பாய்ந்து பறப்பது போன்ற உணர்வில் கமலா ஆனந்தக்களிப்பில் அங்குமிங்கும் துள்ளிக்குதித்து உற்சாகமுடன்  ஓடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தன் மகிழ்ச்சியைக் கொண்டாடினாள்.பழமையை பாராட்டி வந்த ஆச்சி தோற்றுப்போனவளாய் ஒரு மூலையில் சுருண்டு கிடந்து கமலாவின் எழுச்சி கண்டு ஏதும் பேசமுடியாதவளாய் உம்மென்ற மூஞ்சியுடன் தனிமைப்பட்டுப் போனாள்.

அதிகாலைப்பொழுதில் பறவைக் கூட்டங்கள் பாடிப்பறந்த வண்ணமாக இருந்தன.வானம் வெளுத்து அது தன் வீதியெங்கும் மஞ்சள் வண்ண ஒளியைப் பூசி மங்களம் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தது.கமலா இன்று மீண்டும் பள்ளிக்குச்செல்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டதோ என்னவோ அந்த விடிகாலைப் பொழுதும்.வழக்கத்திற்கு மாறாகவே உலகம் புத்துணர்ச்சி பெற்று புதுப்பொலிவுடன் காணப்பட்டது.

கமலாவின் விடுதலைக்காகப் போராடிய ராஜா கமலாவின் சுதந்திர கீதத்தை ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு ரசித்துக்கொண்டிருந்தான்.அப்போது ஜன்னல் வழியே ஒரு காகிதச்சுருள் பறந்துவந்து அவன் காலடியில் பணிந்தது.என்னவென்று எடுத்து அதை விரிக்கிறான்.அது கமலாவின் கைவண்ணத்தில் உருவான அவள் இதயம் வரைந்த எழுத்தோவியம்.

பௌர்ணமி ஒளியில் பரவசம் ஆடும் கடல் அலைகளென அவன் கற்பனைகள்.ஒன்றன் பின் ஒன்றாக தொடர்கின்றன.வள்ளுவன் எழுதிய முதல் குரல் கண்டு தமிழன்னை எந்த அளவில் ஆனந்தம் அடைந்திருப்பாளோ அந்த ஆனந்தத்தின் விளக்கம் இன்று அவன் முகத்தில் ஒளிர்ந்தது.இன்பத் திளைப்பில் அவன் இதயம் துடித்த வேகத்தின் அளவை எந்தக் கருவி கொண்டும் அளவிட முடியாது.விழிகள் விரிகின்றன.கடிதத்தில் விளைந்து குவிந்து கிடக்கும் மணிகளை அள்ளி ஆராதிக்க ஆவல் கொண்டு பாய்கின்றன.அந்தப் பாய்ச்சலின் வெப்பத்தைக் குளிர்விக்க விழிகளில் பனித்துளிகள் துளிர்க்கின்றன.

எழுத்தில் கோர்க்கப்பட்ட அந்த முத்து மாலைகளை அவன் கண்கள் தம்மில் ஒத்திக்கொள்கின்றன.வாசம் நுகர்ந்து பாசமுடன் படிக்கின்றன.ஆசைகள் வரிகளை நகர்த்துகின்றன.

“என் இதயம் நிறைந்த ராஜா!இன்று உன்னால் எனக்கு விடுதலை.இது என் வாழ் நாளில் ஒரு விடிவு காலம்.எனக்கு விடியலைத் தந்துதவிய பகலவன் நீ!உனக்கு நன்றி சொல்ல என்னிடம் போதுமான அளவில் சொற்கள் இல்லை.தேடிக் கண்டு அகப்பட்ட சில சொற்களால் மட்டும் போற்றி உன்னை ஆராதிக்கிறேன்.என் கரங்கள் உன் திசை நோக்கித் தொழுகின்றன.என் விழிகள் உன்னை அர்சிக்கத் தேடுகின்றனஅவைகள் தீர்த்தம் நிரப்பிக்கொண்டு காத்துக்கிடக்கின்றன.என் இதழ்கள் உன் புகழ் பாடுகின்றன.இந்தப் பூஜை வேண்டுதலை ஏற்றுக்கொள்ள பள்ளியில் வீற்றிருக்க வேண்டுகிறேன்.

நன்றி!

இப்படிக்கு
உன் அன்பின் மலர் கமலம்.”

பிறவிக்குருடன் பார்வை பெற்றார்ப்போல் ஆனந்தக் கூத்தாடினான்ராஜா.
அக்கடிதத்தை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ஜன்னலைப்பார்க்கிறான் ராஜா.அங்கே முல்லைத் தோட்டமாய் கமலாவின் காட்சி.நாடு மக்களாட்சி மலர்ந்த நாளில் நிறைந்த மலர்ச்சி.

“ராஜா”அன்புத்தாயின் அழைப்பு.”பள்ளிக்கூடம் போக நேரம் ஆகலையா?”

“இதோ வாரேம்மா” கடிதத்தை பூப்போன்று இதமாக மடித்து தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.

“ஆமா அங்க என்னடா பண்ற”

(தொடரும்}.


கொ`பெ`பிச் சையா.