அய்யாவின் கதைகள்
Friday, 14 March 2025
கரிசல் காவியம்18
Wednesday, 26 February 2025
கரிசல் மண்16
கரிசல் மண்ணில் ஒரு காவியம்
அத்தியாயம் 16
ஆசிரியர் சமயோசிதமாக இடம் பார்த்து நச்சுன்னு ஒரு கேள்வியை நறுக்குன்னு வைத்தார்.இவர் போட்ட கிடுக்குப்பிடியில் மாட்டிக்கொண்ட கமலாவின் அப்பாத் தன் தாயாரின் முகத்தைப்பார்த்து,”இதற்கு நான் என்னம்மா பதில் சொல்வது”என்பது போல் ஆதங்கமாய் விழித்தார்.தன் தாயாரின் எதிர்வினை இதற்கு எப்படி இருக்குமோ! எனும் அச்சமும் அவர் முகத்தில் இழையோடியது.தலைமை ஆசிரியர் கமலாவின் தந்தையார் என்னசொல்லுவார் எனவும் ஆர்வத்தோடு அவர் கண்களின் பரிதவிப்பைக் கண்டு எதிர்கொண்டு காத்திருந்தார்..
உடனே கமலாவின் தந்தை சுதாரித்துக்கொண்டு ஆசிரியரின் கேள்வியைப் புரிந்து கொண்டவராய்க் காட்டிக்கொண்டு.நமட்டுச் சிரிப்பு ஒன்றை உதட்டிலேயே சிரித்து “அடடே இவரிடம் மாட்டிக்கொண்டு விட்டோமே.பாதகமான பதில் சொன்னால் நமது பகல் வேசம் பல்லிளித்துவிடுமே”எனத் தன் மனதில் தனக்குள்ளே எண்ணிக்கொண்டு
“அய்யா நீங்க என்ன கேக்க வாரீங்கன்னு எனக்கு நல்லாவே புரியிது..கமலாவை ஏங் பள்ளிக்கு இன்னும் அனுப்பாம வச்சுரிக்கீகன்னுதான கேக்குறீக. சமூகச் சமநிலைச் சித்தாந்தவாதிகளான பெரியார் பாரதியார் மற்றும் வள்ளலாரைப் பற்றி புரிந்துவைத்துள்ள இவர் ஏன் இப்படிப் பிற்போக்கு வாதியா இருக்குறாரேன்னு என்னுடைய கொள்கைய நீங்க சந்தேகப்பட்டுக் கேக்குறீகன்னு எனக்குப் புரிஞ்சிருச்சு.”எனும் அப்பெரியவரின் மறுமொழி கேட்ட தலைமை ஆசிரியர் ,”ஆமா அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்களேன்”
எனத்”தனது தெளிவான கண்ணொளியில் மௌனமான சிரிப்போடு ஆமோதித்தார்.
‘”பள்ளிக்கு அனுப்பத்தான் இருக்கிறோம் அய்யா அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு”என அமைதியாகக் கூறி ஆசிரியரின் வெற்றி முத்தைப்பார்த்துப் புன்னகைக்கிறார் கமலாவின் அப்பா.இந்த சொற்கள் ஆசிரியரின் செவிகளில் ஆயிரம் குடங்கள் தேன்நிரப்பிக் கொட்டியதுபோல் இனித்தது.அவர் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.கலிங்கத்துப்போரில் வென்ற அசோகரைப்போல் ஆனந்தம் கொண்ட அதே வேளையில் தோற்றுத் தலை தாழ்ந்த கமலாவின் ஆச்சி முகம் கண்டும் தன் வெற்றியை அமைதியாக சுவைத்துக்கொண்டு அப்பெரியவரின் கைகளைப் பற்றி ,”மிக்க நன்றி அய்யா”எனக்கூறி தன் கண்களில் ஆனந்தக்கண்ணீரை உதிர்க்கும் முன் தன் கைத்துணியால் அவசரமாகத் துடைத்துக்கொண்டார்..
ஆனால் அப்போது ஆச்சியின் முகத்தில் கடுகு வெடிக்கும் எரிச்சல்கொடூரமாக இருந்தது.அதையும் ஆசிரியர் கவனிக்கிறார்.ஆனால் ஆச்சியின் முயற்சிகள் இனி பலிக்காது எனத தெளிவடைந்தார்.இருந்தாலும் உறுதி செய்துகொள்ளும் விதத்தில் எப்போது அனுப்பலாம் என்று எண்ணுகிறீர்கள்"எனக்கேட்டார்
“வரும் திங்கள் கிழமை அனுப்பி வைக்கிறேன்.இப்போ உங்களுக்கு திருப்தியா:"என மீண்டும் இனிப்பைத் தந்தார். “மிக்க மகிழ்ச்சி அய்யா.அப்போ நான் வரட்டுங்களா?......சரி.கமலாவிடம் கூற வேண்டுமே!....கமலா”!என வெற்றிசங்கம் முழங்குவதுபோல் ஆனந்த் தொணியில் அழைத்தார்.
கமலா மகிழ்ச்சி வெள்ளப்பெருக்கு மடை உடைத்துத் துள்ளிப் பாய்ந்து வருவது போல் குடுகுடுவென ஓடோடி வந்து தன் தலைமை ஆசிரியரின் கால்களில் விழுந்து நன்றிக் காணிக்கை யாக ஆனந்தக் கண்ணீர்த் துளி முத்துக்களைக் கொட்டி அர்ச்சிக்கிறாள்..உடனே ஆசிரியர் தன் இருகரங்களாலும் அவளை அன்பால் அரவணைத்துத் தூக்கி அவள் கண்களில் வழியும் நன்றிக் கண்ணீர்த் துளிகளைத் தன் விரல்களால் தட்டிவிட்டு ஆசிர்வதிக்கிறார்.
“இப்போ உனக்கு சந்தோசம்தானே.இன்னும் இரண்டே இரண்டு தினங்கள்தான்.திங்கள் கிழமை முதல் மீண்டு என் வகுப்பறையில் நீ அமர்ந்து கலகலக்ச்செய்யப்போகிறாய்..சரி நான் வரட்டுமா?’"என கங்கை கொண்ட சோழனாய் வெற்றிக் களிப்பில் பெருமிதத்தோடு வந்த வினை முடித்து நகர்ந்தார்.அப்போது தன் இரு கைகளைக் கூப்பி வணங்கி மறுவாழ்வு வாழ வைத்த வள்ளலை வாழ்த்தி நின்றாள்.
ஆசிரியர் எப்போது வெளியே செல்வார் எனக் காத்துக் கொண்டிருந்த ஆச்சி தன் ஆட்டத்தைத் துவங்கினாள்.
“பொட்டப்புள்ளைக்கு எதுக்குப் படிப்பு,மண்ணாங்கட்டி.இவ என்னப் படிச்சுக் கலக்டர் வேலைக்கா போகப்போறா?.
அடுப்பு ஊதப்போற கழுதைக்கு இம்புட்டுப்படிச்சது போதாதாக்கும்.அதெல்லாம் பள்ளிக்கூடம் ஒண்ணும் போனதும் போதும் போதும்”எனத் தன் வசனத்தைப் பேசித் தீர்த்தாள்.
இதுவரை அமைதியாகப் பொறுமையோடு பொறுத்திருந்த கமலா இப்போது பொங்கி எழுந்தாள்.ஏய்க் கெழவி! என்ன ஓவராப் பேசுற!படிப்பப் பத்தி உனக்கு என்னத் தெரியும்? படிப்புங்குறது என்னோட சொந்த வாழ்க்கைப் பிரச்சன.அது வேணுமா வேண்டாமான்னு நான்தான் முடிவு எடுக்கணும்.உன்னோட முடிவு எனக்குத் தேவ இல்ல புரிஞ்சுதா?இன்னுமே என்னோட வாழ்க்கையில வெளயாண்ட! அப்புறம் நாங் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது.ஜாக்கிரத.”எனத் தன் உணர்வுகளைக் கொட்டிக் குமுறினாள் கமலா.
“என்னடி பெரியவங்கள மரியாத இல்லாமப் பேசுற. இந்த வீட்ல நாந்தாங் பெரிய மனுசி.அதனால நாங் என்ன நெனக்கிறேனோ அதாங் நடக்கும்.”என தன் வழக்கமான பழைமை மடமையில் பேசினாள் ஆச்சி.
“என்னது பெரிய மனுசியா?யாரு! நீ பெரிய மன்சியா?நல்லது செஞ்சா நீ பெரிய மனுசி!.ஆனா நீ நயவஞ்சகி.என்னோட எதிகாலத்தக் கெடுக்க நெனக்கிற மோசக்காரி நீ பெரிய மனுசியா?பெரிய் மனுசின்னா புள்ளங்கள படிக்க வச்சு அழகு பாக்கணும்.ஆனா நீ என்னப் படிக்கவிடாமக் கெடுத்துக் குட்டிச்சுவரா ஆக்கப் பாக்குற சண்டாளி நீ!ய !நீ யெல்லாம் நல்ல சாவே சாக மாட்ட. புழுத்துப் புண்ணாகி நாறி நாத்தமெடுத்துச் செத்து நரகத்துக்குத்தான் போவப் பாவி நீ!இது உன்னொடப் பழைய பைத்தியக்காரக் காலமுன்னு எண்ணாத!இது பாரதி, பாரதிதாசன், பெரியார்கள் கண்ட புதுஉலகம்.
எங்களுக்கும் அவங்க எப்படிப் பேசனுமுன்னு சொல்லிக் குடுத்துருக்காங்க.இன்னுமே எல்லாம் பொண்ணுங்களப் பூட்டி வச்சி அடிமையாக்கனுமுன்னு நெனச்சா அது நடக்காது..
பொம்பளைங்களும் உசுருள்ள ஜீவன்கள்தான்.
அவங்களுக்கும்.உசுரு இருக்கு உணர்வுஇருக்கு.அவங்களுக்கும் சுயமா சிந்திக்குற அறிவு இருக்கு.பொம்பளைங்கன்னா அடுப்புலகிடந்து சாவுரதுக்கும்.கோலம் போடுறதுக்கும்,புள்ளயப்பெத்துக்குடுக்குறதுக்கும் மாத்திரமுன்னு நெனைக்காத.அது உன்னோட அந்தக் காலம்.இந்தக்காலம் பொம்பளைங்க ராக்கெட்டுல பறக்குற காலம்..துப்பாக்கி எடுத்து எல்லையில நின்னு உன்ன மாதிரி எதிரிங்களோட சண்ட செஞ்சிச்சுட்டுத் தள்ளுறக் காலம்.ஆம்பளைங்க செய்யிற எல்லா வேலையும் பொம்பளைங்களும் செய்வாங்க புரிஞ்சதா?இன்னுமே ஏதாவது இப்படி முட்டாத்தனமா பேசுனே நானே கல்லத் தூக்கிப்போட்டுக். கொன்னுருவேங் ஜாக்கிரத.”என ஆவேசமாகக் கொந்தளித்தாள் கமலா.
“ஓகோ அப்படின்னா அந்தப் பயலுக்குக் கல்லத்தூக்கிப் போடச்சொல்லி நீதாங் சொல்லிக்குடுதையா?”என பேச்சை திசை மாற்றினாள் ஆச்சி.
அதுவரை தன் மகளின் அறிவார்த்தமான பெண்ணுணர்வின் எழுச்சி முழக்கங்களை வியப்போடு ஆர்வமாகக் கவனித்துக் கொண்டிருந்த தந்தை தன் மகளைப்பற்றித் தவறாகப் பேசும் தாயே ஆனாலும் பொறுத்துக் கொள்ள முடியாதவராய் அவசரமாகக் குறுக்கிட்டு “அம்மா! என்ன நீ பேசுற!பொம்பளப் புள்ளைக்கிட்ட என்னப் பேசுறேன்னுபுரிஞ்சுதான் பேசுறயா!பெரியமனிசி பேசுற பேச்சா இது!”எனத்தன் தாய்க்கு எதிராக நியாயமான திசையில் பேசத் துவங்கினார்.
“ஏண்டா அவ இவ்வளவு நேரமும் என்ன பேச்சுப் பேசுனா.அப்பெல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்துட்டு இப்பக் கொந்தளிக்கிற.அவள நீ ஒரு வார்த்தையாவது கண்டிச்சியா?”எனத் தன் மகனைத் துணைக்கிழுக்கும் முயற்சியில் இறங்கினாள் கெழவி.அவ தப்பா எதுவும் பேசலயே.அவ பாதிக்கபட்டவா அவளுக்கு வேகம் இருக்கத்தாங் செய்யும்.நீ இன்னும் பழைய காலத்தயே இறுக்கிப் புடிச்சித் தொங்கிக்கிட்டு இருகுற! அதெல்லாம் இப்போ எடு படாதும்மா. அவபடிக்கணுமுன்னு நெனக்கிறா.அத நெனச்சி நாமப் பெருமைப்படணும். இப்போக் காலம் ரொம்ப மாறிப்போச்சும்மா.அதனால ஓங்க்காலத்த மாதிரி இன்னும் நினைக்கக்கூடாதும்மா.
புள்ளைங்க என்ன ஆசப்படுதோ அத நிறவேத்தி வைக்கிறதுதாங் பெரியவங்க கடமை.அத ஏங் நீ புரிஞ்சிக்காம அடம் புடிக்கிற..உனக்கு வயசு ஆயிப்போச்சு.ஓங் காலமும் முடிஞ்சி போச்சு..அவங்க வாழ வேண்டிய வயசு.அதனால அவங்க வாழ்க்கையைப்பத்தி அவங்க கவலைப்ப்டுறதுக்கு அவங்களுக்கும் பொறுப்பு இருக்கு உரிமை இருக்கும்மா.
அவ படிக்கணுமுன்னு சொல்றவட்ட நாம வேண்டாமுன்னு எப்படி சொல்லமுடியும்.இது அவ வாழ்க்கைப் பிரச்சன அதுல நாம ஒரு குறிப்பிட்ட எல்லைவரைக்கும்தான் தலையிட முடியும்.நாம அதையும் தாண்டி தலையிட்டா அப்புறம் நமக்குத்தான் மரியாத இருக்காது.ஏன்னா இப்போல்லாம் அவங்களுக்கு நால்லாவே அறிவுபூர்வமா யோசிக்கத்தெரியுது.அத நாமதான் புரிஞ்சிக்கணும். அவங்க அவங்க எதிர் காலத்தப்பத்தி அவங்க அவங்களுக்கு அக்கறை இருக்குதுநாயம்தானம்மா
அவபடிக்கப்போகட்டும்.
வீணாத் தடுத்துக் கடைசிக் காலத்துலப் பாவப்பழியச் சுமக்காத.உனக்கு ஆசையா என்ன வேணுமோ அத மாத்திரம்என்கிட்டக்கேளு
அதுல ஏதாவது குறை இருந்தாமட்டும் எங்கிட்டச் சொல்லு. காலம் போற போக்க புரிஞ்சு நடந்துக்கோ”எனத் தாயைச்சமாதானப்படுத்தி மகளைத் தன் நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு,”.இனி நீதானம்மா எங்களுக்கு எல்லாம். நாங்க வாழ்றதே உனக்காகத் தானம்மா.ஆச்சி சொன்னதையெல்லாம் மனசுலவச்சுக்காத..போ..ஆமா சாப்புட்டயாம்மா நீ ........ஏம்மா சுப்பு கமலா சாபட்டாளா?எனக் கேட்கிறார் சாமிநாதன்.
இதுவரை மௌனமாக கவனித்துக் கொண்டிருந்த கமலாவின் தாயார் சுப்பு இப்போதுதான்.நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறாள்..கமலாவின் கல்விப்பயணம் தொடர்வதில் அவளுக்கும் மகிழ்ச்சிதான்..அவள் மகிழ்ச்சி பொங்கிய உற்சாகமான குரலில் “கமலா!வாம்மா!வா!சாப்புடு.வா வா.சாப்பிட்டுட்டு ஓங் யூனிபாம் ட்ரெஸ் எல்லாம் துவைக்கன்னுமுல்ல`வா..வா.!
(தொடரும்)
கொ.பெ.பிச்சையா.
கரிசல் மண்ணில் ஒரு காவியம்1
கரிசல் மண்ணில் ஒரு காவியம் 1

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.
அத்தியாயம்--1
பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்,பள்ளி முடிந்து வந்தததும் அவளும் நானும்தான் விளையாடுவோம்.எங்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டே அப்பா அம்மா விளையாட்டுத்தான்.அப்போதே அதன் அர்த்தங்கள் புரிந்துதான் இருந்தது.ஆனாலும் அதை விளையாட்டாகத்தான் விளையாடினோம்.ஓடிப்பிடிப்போம் கட்டித்தழுவுவோம்.ஆனாலும் அப்போது ஆணென்ன பெண்ணென்ன பால் வேற்றுமை புரியவில்லை.
வேறு யாரையும் விளையாட்டுக்குச் சேர்ப்பது இல்லை.வேறு யாரும் எங்களையும் சேர்ப்பது இல்லை.ஏனெனில் எனக்காக அவளும் அவளுக்காக நானும் எவரிடமும் விட்டுக் கொடுப்பது இல்லை.
பக்கத்துப் பக்கத்து வீடு.நானும் என் அம்மாவும்தான்.என் அம்மா விடிந்து வேலைக்குப் போனால் அடைந்துதான் வீடு திரும்புவாள்.தினமும் கம்மஞ் சோறுதான்.பச்சை மிளகாயை கடித்துக் கொண்டு கஞ்சியாய்க் கரைத்துக் குடித்தால் அவ்வளவு ருசியாக இருக்கும். என் ஏழ்மை புரிந்து கொண்ட அவள் எனக்காக தேங்காய் துவையல் அரைத்து எடுத்துக் கொண்டு வந்து தருவாள்.
“ஏன் கரைத்துக் குடிக்கிறாய் துவையல் தொட்டுச்சாப்பிட வேண்டியதுதானே”
எனச்செல்லமாகக் கூறி நான் சாப்பிடுவதை பரிதாபமாக் பார்த்துக் கொண்டே இருப்பாள் .அவள் ஓரளவுக்கு வசதியானவள்தான். அவள் வீட்டில் தினமும் நெல்லுச்சோறு காலை மாலை இட்லி தோசைதான்.என் வீட்டில் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் தோசை,இட்லி.நெல்லுச்சோறு எல்லாம்..அதனால் நான் சாப்பிடும் இந்தக் கம்மஞ் சோறு அவளுக்கு ஆசையாக இருக்கும்போலும்.
“டேய் எனக்கும் கொஞ்சம் தாயேண்டா”
எனக் கேட்பாள்.நானும் மறுக்காமல்
“இந்தா நீயும் கொஞ்சம் குடி”
என்று ஒரு அலுமினியத் தம்ளரில் ஊற்றிக் கொடுப்பேன்.அப்போது அவள் ரசித்துக் குடிப்பதை பார்த்து நான் ஆனந்தம் அடைவேன்.
அவள் வீட்டில் என்ன பலகாரம் செய்தாலும் எனக்குக் கொடுக்காமல் அவள் சாப்பிட மாட்டாள்.அவளுடைய அம்மா நல்லவர்தான்.அவளுடைய ஆச்சிதான் சிடுமூஞ்சி.என்னோடு அவள் சேர்ந்து விளையாடுவதைக் கண்டாலே அவளுடைய ஆச்சி முனுமுனுப்பாள்`பள்ளிக்குப் போனாலும் வந்தாலும் சேர்ந்தே போவோம் சேர்ந்தே வருவோம்.அதைக்கண்டு எங்கள்வயதிலுள்ளவர்கள்.எங்களைப் பார்த்து புருஷன் பொண்டாட்டி எனவும்
கேலி பேசுவார்கள் அதையெல்லாம் நாங்கள் கண்டு கொள்வதும் இல்லை.சில நேரங்களில் கேலி கிண்டல் அதிகமாகும் போதுஅவள் அழுவாள் .அப்போது சக மாணவர்களோடு நான் சண்டை கட்டுவதும் உண்டு.அடிபடுவதும் உண்டு.ஆனால் அந்த அடியும் வலியும் அவள் தடவிக்கொடுக்கும்பொழுது காணாமல் போய்விடும்.ஒரு நாள் ஆசிரியர் நான் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று என்னை அடித்து விட்டார்.அந்த வலியை நான் தாங்கிக் கொண்டேன் .ஆனால் அவளால் என்வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.அப்படியொரு இனம் புரியாத பாசம்.
தினமும் இரவுப் பாடம் படிக்க அவளுடைய வீட்டுக்குத்தான் பையை தோளில் போட்டுக்கொண்டு போவேன்.என் பாடங்களை எல்லாம் அவள்தான் எழுதிக்கொடுப்பாள்.அந்த நாளில் மின்சாரம் என்றால் நகரங்களில்தான் காணமுடியும்.கிராமங்களில் மண்ணெண்ணை விளக்குத்தான்.ஒரு விளக்கைக் கொளுத்தி வைத்துக்கொண்டு அதைச்சுற்றி வட்டமாக உட்கார்ந்துகொண்டு படிப்போம்.போதாத வெளிச்சம்தான்.குனிந்துகொண்டு மிகவும் உற்றுக்கவனிதுதான் பாடங்களைப் படிக்கவேண்டும்.தெருவிளக்குகள் நிலாக் காலம் மட்டும்தான்.மற்ற நாட்களில் வான் நட்சத்திரங்கள் மட்டுமே மங்கலான ஓரளவுக்கு உருவம் புரியும் அளவுக்கு மெல்லிய இருளாக இருக்கும்.எனக்கு இருள் என்றால் அப்போதே பயம்.அதனால் அவள்தான் என்னை வீடுவரை துணைக்கு வந்து உதவுவாள்.
வழக்கம்போல் பள்ளிக்குப் புறப்பட்டு தோளில் புத்தகப்பையை தூக்கிப் போட்டுக்கொண்டு அவள் எனக்காகக் காத்திருப்பாள் என அவசர அவசரமாக வீட்டைவிட்டு வந்தேன்.எனக்குப் பள்ளிக்குச்செல்ல வேண்டுமே என்ற அக்கறையைவிட அவளோடு சேர்ந்து போவதில்தான் என்னையும் அறியாமல் எனக்குள் இருந்த துடிப்பு.இது எனக்கு அப்போது புரியவில்லை.இப்போது அதை எண்ணிப்பார்க்கும்போது அது பாலியல் ஈர்ப்புதான் எனப்புரிகிறது.எனக்கு ஆண் மாணவ நண்பர்களே இல்லை.அதை நான் விரும்பவும் இல்லை .
எனக்கு எல்லாமே அவள்தான் எனும் ஒரு பற்று.அவளைக்காணாமல் என்னால் தனியே பொழுதைத் தள்ள இயலாது எனும் நிலை.அவள் ஒரு நாள் ஊரில் இல்லை என்றால்கூட அவள் வீட்டின் முன்ப்பாக உள்ள அந்த முருங்கை மரத்தைப் பிடித்துக்கொண்டு அவளோடு அதைச்சுற்றிச்சுற்றி அவளோடு விளையாடுவதுபோல் விளையாடிக்கொண்டு அவள் வீட்டு வாசலிலேயே கிடப்பேன்..இப்படியொரு பந்தம் எப்படி என நான் சிந்திக்கவும் பக்குவப்படவில்லை.அப்படியொரு முயற்சி எனக்குள் தோன்றவும் இல்லை.அது எல்லாமே அனிச்சைச் செயலாகத்தான் இருந்துள்ளது.
பள்ளிக்குச்செல்வதற்காக வேகமாக அவளைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்குள் அவள் பெயரைச்சொல்லி அழைத்துக்கொண்டு நுழைய முயன்றேன்.அவளுடைய ஆச்சி வாசலில் நின்றுகொண்டு
“டேய் எங்கடா போற “என அவசரமாகத் தடுத்து---
“அவள் இனிமேல் உன்னோடு வரமாட்டாள்”நீ போடா”என என்னை விரட்டுவதுபோல் அதட்டினாள்.
நானும் புரியாதவனாய்
“ஏன் ஆச்சி அவளுக்கு காய்ச்சலா”என் வினவினேன்.
அதற்கு ஆச்சி –
“ஆமாம் அப்படித்தான்.....நீ போடா!”என என்னை விரட்டிவிடுவதிலேயே குறியாக இருந்தாள்`
அதற்குள் என் அம்மா பின்னாலயே வேகமாக வந்து
“டேய் ராசா அவள் வரமாட்டாள்.இன்னுமே நீ மட்டுந்தான் தனியா பள்ளிக்கூடம் போகணும்.”
எனக்கூறி என் கையைப் பிடித்து இழுத்து அழைத்துப்போனாள் .
நானும் விடவில்லை மாறி மாறி என் அம்மாவிடம் கேட்டேன்
“ஏம்மா......ஏம்மா வரமாட்டாள் ,அவளுக்கு என்னம்மா,.....சொல்லும்மா .....சொல்லும்மா “
புரிந்து கொள்ளாத வயதில் அம்மா என்ன சொல்லுவாள்.!
“டேய் ,,நீ..சின்னப் பையன் ,உனக்கு இதெல்லாம் புரியாது. சொன்னாக் கேளு !
அம்மா சொல்ரேன்ல்ல.நீ மட்டும் போ ராசா” என என்னைச்சமாதானபடுத்தி அனுப்பிவைத்தாள்`
அப்புறம் அவள் என்னைப் பார்ப்பதும் இல்லை பேசுவதும் இல்லை.எப்படி என்னை மறந்தாளோ
நினைந்தாளோ தெரியவில்லை.
கொ.பெ.பி.அய்யா.
(தொடரும்.)
Saturday, 22 February 2025
கரிசல் மண்ணில் ஒரு காவியம். அத்தியாயம் 15
கரிசல் மண்ணில் ஒரு காவியம் 15

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 15
அத்தியாயம். 15
தலைமை ஆசிரிரியர் கமலா வீட்டிற்குள் வருகை தருகிறார்.கமாலாவின் தந்தை உரிய மரியாதையுடன் இரு கைகூப்பி வணங்கி வணக்கம் கூறி நாற்காலியில் அமர வேண்டுகிறார்.
“அய்யா வணக்கம்! வாருங்கள்.உட்காருங்கள்!.ஏம்மா கமலா உங்க சார் வந்திருக்கார் பாரு.அப்படியே அய்யாவுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா!.”இந்த வார்த்தைகைகளைக் கேட்டவுடன் கமலாவுக்கு மறுவாழ்வு கிடைக்கப்போகிறது என்பது போன்று பூரிப்பு.அவளுக்குள் ஏற்படுகிறது. ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
“இதோ வாரேம்ப்பா!.என குடுகுடுவென ஓடுகிறாள் அலமாரியிலுள்ள புத்தம் புதிய பளபளக்கும் டம்லரைத்தேடி எடுக்கிறாள்.இருக்கிற பளபளப்பு போதாதென்று மேலும்மேலும் அதை நன்றாக துலக்கி சுத்தமாகக் குளிர்ந்த தெளிந்த நீரை முதலில் கொண்டு வரும்போதே மிகவும் பவ்வியமாக “வணக்கம் சார்”!எனும் வணக்கம் கூறும் மொழியில் "என்னை இந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுங்கள்"எனக் கெஞ்சுவது போல் தன்னுடைய உள்ளுணர்வை அந்த ஒற்றைச்சொல்லில் மௌனமாக வெளிப்படுத்தினாள்.ஆசிரியர்கள் மாணவர்களின் உளவியல் கற்றவர்கள்.அந்த ஏக்கமான மௌனமொழியைப்பற்றிப் புரிந்துகொள்ள மாட்டார்களா என்ன!.கமாலாவிடமிருந்து அந்தத் தண்ணீரை வாங்கும்போது”கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன் “என ஆறுதல் சொல்வது போன்று “ம்ம்ம்ம்.எப்படிம்மா இருக்க! கமலா!நல்லா இருக்கியா?என்றார். அந்த அன்பான மொழி அவள் செவிகளைத் தொட்டத் தருணத்தில் கமலாவின் விழிகளில் பனித்துளிகள் போன்று சில நீர்த் துளிகள் துளிர்த்து மீள்கின்றன.சில சொட்டுக்கள் தரையில் பொட்டென உதிர்கின்றன.
கமலாவின் மனக்கவலையைப் புரிந்து கொண்டவராய் ,"சரிம்மா நீ உள்ளே போ நான் ஆச்சியைப்பற்றி அப்பாவிடம் விசாரிக்க வேண்டும்”எனக் கூறி “கவலைப்படாதே!நல்லதே நடக்கும் “எனக் கண்சாடை செய்கிறார் பண்புள்ள தலைமை ஆசிரிரியர்.கமலா உள்ளே நகர்கிறாள்.
“சரி சார் ஆச்சி எப்படி இருக்குறாங்க.பூரணமாக் குணமாயிட்டாங்களா?என ஆசிரியர் தன் பேச்சைத் சாதுர்யமாகத் துவக்கினார்.
.
“பரவாயில்லை அய்யா.ஒண்ணும் பிரச்சனை இல்ல நல்லா சுகமாயிட்டாங்க..ஏதோ கடவுள் புண்ணியத்தில முழுசா குணமாகி வீட்டுக்குத் திரும்பி வந்துட்டாங்க..அய்யா! ஏங் வீடு தேடி வந்து விசாரிக்கிறது என்னுடைய பாக்கியம் அய்யா! “என மீண்டும் நன்றி கூறும் விதமாகக் கைகூப்பி வணங்கினார்.
“ஆச்சியைப் பாக்குற சாக்குல அப்படியே கமலாவையும் பாத்துக்கிட்டுப் போகலாமே!ஒரே கல்லுல ரெண்டு மாங்கா எப்படி?’எனும் நகைச்சுவையோடு பேச்சை லாவகமாக நகர்த்தினார்.
இருவரும் கொள்ளென மனம் விட்டுச்சிரித்தனர் “கமலா எம்பொண்ணு மாதிரியாச்சே.
அதுமாத்திரமல்ல அவா நல்லாப் படிக்கிற பொண்ணு.கமலா மேல எனக்குத்தனி அக்கறையுண்டு.அவள எப்போப் பாப்போம்ன்னு இருந்தது.இப்போ ஆச்சியால அந்தவாய்ப்புக்கிடைச்சது.
விடுவேனா என்ன? இதுதான் நல்ல வாய்ப்புன்னு நினச்சேன் உடனே கெளம்பி வந்துட்டேன்.எப்படி சார்?”என நளினமாகப் பேசி கமலாவின் தந்தையின் எதிர் வினையைக் கவனிக்கிறார் தலைமை ஆசிரியர். அப்போது கமலாவின் தந்தையின் முகத்தில் ஈ ஆடவில்லை.
அவருக்குள் ஏதோவொரு குற்ற உணர்வு அவரது முகப்பொலிவு மாறுவது ஆசிரியர்க்குப் புரிகிறது.அவருக்கு நம்பிக்கையும் வருகிறது.இந்தப் பழம் கனியும் என்றும் புரிகிறது.
மேலும் தான் குறி வைக்கும் இலக்கிற்கு எவ்விதம் காயை லாவகமாக நகர்த்தலாம் என்பதற்கும் அந்த வீட்டுக்குள்ளேயே தந்திரம் தேடி சுவர்களைச்சுற்றும் முற்றும் பார்க்கிறார்.சுவரிலே வள்ளலார் படமும்,பாரதியார் படமும் கூடவே காமராஜரும் பெரியாரும் சேர்ந்து உரையாடுவது போன்ற படங்களும் ஆசிரியரின் கண்களுக்கு கலங்கரை விளக்கங்களாகக் காட்சியளிப்பதோடு நன்னம்பிக்கை முனைகளாகவும் ஆசிரியர்க்கு வழிகாட்டிகளாவும் அப்படங்களில் உள்ள மகாத்மாக்கள் பிரகாசித்தார்கள்.அப்போது நல்லது நடக்கும் என்றும்.பெண்விடுதலையைப் பற்றிப் பேசவும் வந்த அந்த நல்ல உள்ளத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நாமும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கலாமா?அவர் எண்ணி வந்த வேலை எவ்வளவு சுலபமாகப் போகிறது என்பதை எண்ணித் துள்ளிய அவருடைய அந்த அன்பு மனம் எந்த அளவில் நம்பிக்கையோடு ஆனந்தக்கூத்தாடி களித்திருக்கும் என்பதை எண்ணி எண்ணி நாமும் அவரோடு களிநடனம் ஆடி மகிழ்வோமா? ,
சரி களிநடனம் ஆடிக்கொண்டாடியது போதும் கதைக்கு வருவோம்.இப்போது மறு மலர்ச்சி பெற்றவராய் புத்துணர்வு பெற்ற புதுப்பொலிவுடன் அவர் நம்பிக்கை பெற்றார் என்பதை அவருடைய முகம் ஆயிரம் ஒளி சக்தி பெற்ற மின்விளக்காய் சொலித்தது.அப்போது அவர் பேச்சை மிகவும் மென்மையாக இதமாக கனிவாக மேலும் ஒரு புதிய கோணத்தில் திருப்புகிறார்.அப்போதுதான் அவர் கற்ற உளவியல் அவருக்குக் கைகொடுக்கிறது.
“சார் இந்தப்படங்களில் உள்ளவர்கள் எல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்குமோ!”என மல்லிகை அவில்வதுபோன்று சொற்களைத் தன் அழகானப் பாணியில் இனிக்கும் விதமாகக் கேட்கிறார்.
அவரும் புன்சிரிப்போடு”ஆமாம் அய்யா அவர்கள்.அத்தனை பேருமே.என் மனதுக்கு மிகவும் பிடித்தவர்கள்..சுருங்கச்சொன்னால் நான் அவர்களின் தாசன்”என்றார்.
“உண்மையில் உங்கள நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையா இருக்கு.நீங்க எந்த அளவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பெரிய மனுசர் என்பது இந்தப் படங்களைப் பார்க்கும் போதே என்னால புரிஞ்சிக்கிட முடியிது.ஆகா எப்பேர்ப்பட்ட மகான்கள் இவர்கள்.இவர்கள் படங்களாக அல்ல நமக்குப் பாடங்களாக விளங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.”எனப்புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தவர் திடீரென அவரைப்பார்த்து ஒரு கேள்வியைப் போட்டார்.
“தங்களைப் பார்த்தால் பார்வைக்கு பக்திப்பழமாகத் தெரிகிறீர்கள்..............எனப் பேச்சை முடிக்கத் தயங்கி இழுத்தார்.ஆசிரியர்.
இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொண்ட கமலாவின் தந்தை.”அய்யா நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு எனக்குத் தெளிவாகவே புரியுது.பெரியார எப்படிப் புடிக்கும் முண்ணுதான கேக்க வர்றீங்க?
ஆமோதிப்பதுபோல் தலைமை ஆசிரியர் இதமாகத் தலை அசைத்தார்.
“பொதுவாக சிலர் அப்படித்தான் சொல்றாங்க,பெரியார் ஒரு நாத்திகர் அவரை எப்படி ஆத்திகர்கள் நேசிக்க முடியும்முன்னு.அவர்கள் அவரை புரிந்து கொண்டவிதம்.அவ்வளவுதான்.அவரைப் பற்றி யாரும் இன்னமும் சரியான விளக்கம் தர முயற்சிக்கவில்லை என்பதே என்னுடைய ஆதங்கம்.என்னைப்பொறுத்தவரை நாத்திகம் என்பது ஆத்திகத்திற்கு எதிரான ஒன்றல்ல.ஒரு மார்க்கத்தை சீர் படுத்த முயன்ற ஒரு புதிய மார்க்கம்தான் நாத்திகம் என்பதே என்னுடைய வாதம்.ஆரம்பக் காலத்தில் இத்தனை மதங்கள் இருந்தனவா?இல்லையே!ஒன்றை சீர் செய்ய மற்றொன்றாகத் தோன்றியவைகள்தான் இன்று இத்தனை மதங்களும்.அப்படித்தான்இதுவும். இந்து மதச் சீர்திருத்தவாதிகளாக ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள்.யூத மதத்தின் மறு மலர்ச்சியாக கிறித்தவம்.அதில் ஏசுபிரான் மற்றும் சீசர்கள்.இஸ்லாமில் சூபிக்கள் எல்லோருமே!.அப்படியானால் இவர்கள் எல்லாம் நாத்திகவாதிகளா?அதனால்தான் சொல்றேன்.பெரியாரும் ஒரு சீர்திருத்தவதின்னு ஏங் ஒப்புக்கொள்ள மறுக்கிறாங்கன்னுதான் எனக்கு வெளங்கல்ல.
பெரியார் என்ன சொல்றார்.மக்களுக்கு வாழ்க்கைக்கு பயன்படுறதச்சொல்லுங்க மத்தது தேவை இல்லாம எதுக்குண்ணு கேக்குறாரு இது தப்பா?.பாரதியார் வள்ளலார் போன்றோரெல்லாம் என்ன சொன்னாக உண்மை எதுவோ அதைப்போற்றுங்கள்.மெய்யை மாத்திரம் வழிபடுங்கள்.நிசம் எதுவோ அதை நம்புங்கள்.யாரும் யாருக்கும் எஜமானர் அல்ல.அனைவரையும் சமமாகக் காணுங்கள்.மடமைகளை விட்டொழியுங்கள்.
அப்படித்தான அவங்க சொன்னாங்க. .அதையேதான இவரும் சொன்னாரு.இதுல இன்னொரு வித்தியாசம் என்னன்னா அவங்க பாட்டாப்பாடிக் கொஞ்சம் பதமாச் சொன்னாங்க.இவரு கொஞ்சம் கோவக்காரரு வெடுக்குன்னு வெள்ளையா புரியும்படியா கொஞ்சம் கடுமையாச் சாடிட்டாரு.எதுக்கு அந்தக்கோவம்?.அவுரு வீட்டுக்கு அரிசி அறிக்கலயின்னா?எல்லாம் நாமஎல்லாம் நல்லா சுயமரியாதையோட வாழணும்னுதான அப்படிச்சொன்னாரு.ஒரு பழமொழி சொல்லுவாங்களே! எதுக்கோ எதோடயோ கோவிச்சிட்டுப்போற மாதிரின்னு.அப்படிகோவிச்சுக்கிட்டா யாருக்குநட்டம்?அய்யா ரொம்பப் படிச்சவுக உங்ககிட்ட நான் கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாப் பேசிட்டனோ!”பௌவியமாக இறங்கிக் கொண்டார் கமலாவின் தந்தை.
“அப்பப்பா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையாச் சொல்லி இருக்கீங்க.உண்மையாச் சொல்றேன்.எனக்கே சிலவிசயங்கள் இன்னைக்குத்தான் புரிஞ்சது.எவ்வளவு உண்மைகளைப் புரிஞ்சி வச்சிருக்கீங்க..
உண்மையிலேயே நான் அசந்து போயிட்டேன் போங்க.ன்னு அவரை பாராட்டிவிட்டு தன் இலக்கைத் தொடுகிறார் தலைமை ஆசிரியர்.
“சார் பெண் கல்வியைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
(தொடரும்)
கொ.பெ.பிச்சையா.
வெள்ளூர் ராஜா • 20-Mar-2014 8:40 am
அப்பப்பா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையாச்சொல்லி இருக்கீங்க.உண்மையாச்சொல்ரேன்.எனக்கே சிலவிசயங்கள் இன்னைக்குத்தான் புரிஞ்சது.எவ்வளவு உண்மைகளைப் புரிஞ்சி வச்சிருக்கீங்க..உண்மையிலேயே நான் அசந்து போயிட்டேன் போங்க
----------------------------------------------------- மிக மிக சரியான பார்வை ஐயா..இத்தனை நாள் இதப் படிக்காமல் விட்டு விட்டேனே...!
முன்பு படித்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது:
"பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு என்பதோடு நின்று விடுகிறது இப்போதெல்லாம்;"
ஹா ஹா அருமை அருமை அய்யா
குமரிப்பையன் • 04-Mar-2014 4:28 pm
பெண்களின் கைகள் கட்டுப்பட்டு கிடக்கிறதை சிம்பாலிக்கா சொல்லி இருப்பது நன்று..!
அப்புறம் கமலாவின் அப்பாவிடம் சீக்கிரம் பேசி அவள் படிப்பு தொடர அனுமதி வாங்க சொல்லுங்க.! ஏன்னா.. சாப்பிட நேரமாச்சா...ஆச்சி எழும்பி வந்துற போவுது..!
saro • 04-Mar-2014 8:31 am
கரிசல் மண்
விரிசல் இல்லாமல்
விவேகத்தில் அடிவைத்து புயல்
வேகத்தில் சுற்றுகிறது ! அடுத்த
பாகத்தில் என்ன என்று !
வேகத்தில் வரட்டும் !
அருமை !
வே புனிதா வேளாங்கண்ணி • 04-Mar-2014 8:17 am
கரிசல் மண்ணில் ஒரு காவியம்.
கருத்து மிக்க கதையாக தொடர்கிறது மிகவும் அருமை அய்யா தொடருங்கள் அய்யா நாங்களும் தொடர்கிறோம் ....
Shyamala Rajasekar • 03-Mar-2014 6:57 pm
கதையோடு நில்லாமல் நல்ல கருத்துக்களை கதைப் பாத்திரம் மூலம் கொடுக்கும் பாங்கு சிறப்பு ...!! வாசித்து சில மணித்துளிகள் கரிசல்
மண்ணில் வசித்துவிட்டு வந்தேன் ...!! அருமை அண்ணா ...!!
பழனி குமார் • 03-Mar-2014 6:29 pm
முதலில் என் பாராட்டுக்கள் , நீங்கள் பதிவு செய்துள்ள இந்த அத்தியாயத்தின் முகப்புக்கு . பதிந்துள்ள பொருளுக்கு ஏற்ப , சொல்ல வந்த கருத்துக்கு ஏற்ப , அழகு மிகு படம். அழகு என்று நான் சொலவது , எண்ணத்தின் எதிரொலியை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதை சொல்கிறேன்.
தாங்கள் தொடரை எடுத்து சொல்லும் பாங்கும் , பண்பும், வார்த்தைகளின் கோர்வையும் மிக அருமை ஐயா .
கமலாவின் தந்தையாக வரும் பாத்திரத்தை உருவாக்கியதும் , அவர் மூலம் " சுயமரியாதை சுடர் , பகுத்தறிவு பகலவன் , தந்தை பெரியார் பற்றியும் , அவரின் நாத்திக கொள்கையின் விளக்கத்தையும் மிக தெளிவாக உணரவைத்த உங்கள் எழுத்துக்களுக்கு என் வணக்கம் ஐயா.
நன்கு செல்கிறது தொடரும் ...
தொடரட்டும் ... காத்திருக்கிறோம் நாங்களும் வாசிக்க .
myimamdeen • 03-Mar-2014 6:12 pm
அடுத்து வருவதில்
என்ன நினைச்சிருக்காங்கன்னு பாக்கலாம் .
அருமை அய்யா .
ஒரு நாளும் ஓயாமல்
பகலோனாய் நீங்கள் தரும் ஒளியில்
இருலாவிதில்லை ஒரு நாளும் இந்த "கரிசல் மண்ணில் ஒரு காவியம்"
மிக்க அருமை ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
திருக்குறள் - அறத்துப்பால்
Copyright © 2014 Hiox Website Designed by Free Designer Templates.

.jpg)


.jpg)