கரிசல்
மண்ணில் ஒரு காவியம்.
அத்தியாயம்
6
ஆச்சிக்கு
எங்கள் நட்பின் மீது ஒரு விதமான பயம் கலந்த சந்தேகம் உருவாகத் தொடங்கி
விட்டது.ஆரம்பத்தில் எங்களுக்குள் இருந்தது நட்பா காதலா என எங்களுக்கு அடையாளம்
கண்டுபிடிக்கத் தெரிந்திருக்கக் கூடிய அளவிற்கு அறிவு முதிற்ச்சி இல்லை.எங்கள்
இருவரின் உறவினர்களின் வீணான சந்தேகக் கட்டுப்பாடு கெடுபிடிகளால்தான் எங்களுடைய
உறவில் என்ன இருந்தது.எது இல்லாதிருந்தது என்பதை எங்களை யோசிக்க வைத்தது.அந்தத்
தேடல்தான் நட்பைத் தாண்டி காதல் எனும் இன்னும் ஆழமான புனிதமான உயிரில் கலந்த
சொந்தமாக உணரச்செய்தது.
இதில்
கமலாவின் குடும்பம்தான் அதிகமான எதிர்ப்பைக் காட்டியது.கமலா ஒரு பெண் எனும் பயம்
மட்டும் அவர்களிடம் மேலோங்கி இருந்திருக்குமானால் அது ஒரு இயல்பான அச்சம் அல்லது
அக்கறை எனச்சொல்லலாம்.ஆனால் அந்தக் காரணம் இரண்டாம் பட்சம்தான்.அவர்கள் முதன்மையாக
எடை போட்டுப்பார்த்தது என்னுடைய சாதியையும் பொருளாதாரச் சூழலையும்தான்.எல்லாவகையிலும்
நான் அந்தக் குடும்பத்தைவிடத் தாழ்ந்தவன் என்பதுதான் கமலாவின் குடும்பத்தாரிடம்
அதிகமான கவலையாக இருந்தது.இந்த வித்தியாசம் ஒரு வேளை சமரசம் ஆகி இருக்குமானால்
அன்று எங்கள் நெருக்கத்தில் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காது என்பதே என்
நம்பிக்கை.
ஆகவே
எங்களின் கள்ளமில்லா அன்பை அது பிஞ்சாக இருக்கும் போதே நறுக்கி விடவேண்டும் என
அவள் வீட்டில் ஆச்சியின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கூடி ஒரு முடிவை எட்டியது.அதாவது
ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து என் குடும்பத்தை வம்புக்கு இழுத்து
வாய்ச்சண்டைகள் உருவாக்கத் திட்டம் தீட்டினர்.
எங்கள்
வீட்டில் நாங்கள் இரண்டு ஆடுகளும் நான்கு கோழிகளும் வளர்த்தோம்.கிராமத்தில்
ஏழைகளின் அவசரப் பொருளாதார உதவிகளுக்கு இந்த ஜீவன்கள்தான் உதவும்.எங்கள் ஆடுகள்
அவள் வீட்டின் சவர் ஓரமாகத்தான் படுத்துக் கிடக்கும்.கோழிகளும் அவள் வீட்டு
முற்றத்தில்தான் அடிக்கடி போய் அங்கு சிந்திக்கிடக்கும் அரிசி பயறுகளை
கொத்தித்தின்னும்.அந்தப் பொல்லாக்கிழவி இதைச்சரியான சாக்காகக் கண்டறிந்து என்
அம்மாவோடு சண்டை இழுத்தாள்.
‘அடியே
முத்தம்மா ஓங் ஆடு ரெண்டும் ஏங் சொவர ஒரசி ஒரசி கரச்சி இடிச்சிரிச்சடி.நீதாங் கண்ட
கண்ட பயகளோட சாவகாசம் வச்சிருக்க.ஓங் வீடு இடிஞ்சாலும் அவனுக கட்டிக்
குடுப்பானுக.எங்க சொவரு இடிஞ்சா எவண்டி கட்டிக் குடுப்பாங்.வந்த பயலுக்கு கோழி
அடிச்சிப்போட ஏங் வீட்ல மேச்சிதாங்
வளக்கனுமாக்கும்”
என என் தாயாரின் நடத்தையை களங்கப்படுத்தும் நோக்கில் கிழவியின் சண்டை என்னைக் குறி
வைத்துத்தான் அவள் வார்த்தைகளை அள்ளி வீசினாள்.
காரணம்
அந்த சண்டைக்குள் என்னை இழுக்கவேண்டும் என்பதற்காகவே என் தாயாரின் நடத்தையை
உண்மைக்கு மாறாக இழித்துப் பேசினாள்.பொதுவாக கிராமங்களில் சண்டை என்றாலே கணவனை
இழந்த பெண்களை மிகவும் மட்டமாக வாய்கூசாமல் கேவலப்படுத்திப் பேசுவதுதான் இன்றும்
வழக்கமாக இருக்கிறது.ஒரு பெண் அவள் தன் கணவனை இளம் வயதில் இழந்து விட்டால் அது ஒரு
சாபக்கேடுதான்.பாவம் என் அம்மா.அப்படியே கூனிக்குறுகி விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டாள்.அதைப்பார்த்து
என் மனம் பொறுக்கவில்லை.
வேறு
வழியில்லை.நானும் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.தாயைப்ப்
பழித்துப் பேசும் போது யார்தான் பொறுத்துக்கொள்ள முடியும்.நானும் நேற்றுவரை ஆச்சி
என்று அழைத்த மரியாதையான சொல்லை கொஞ்சம்
மாற்றிப் பேசவைத்து விட்டாளே அந்தக் கூறு கெட்டக் கிழவி என எண்ணும்போது என் மனம்
வேதனைப்படுகிறது.
ஆமாம்
நானும் என் உச்சமான கோபத்தில் சொற்களைக் கொட்டிவிட்டேன்.
“ஏய்
கிழவி!வார்த்தையைக் கொஞ்சம் அளந்து பேசு.உனக்குத்தான் பேசத் தெரியுமுன்னு
பேசாத.அப்புறம் நாங் பேச ஆரம்பிச்சா ரொம்ப அசிங்கமாப் போயிரும்.நீ பெரிய மனுசி
பேசிட்டே .ஆனால் நாங் சின்னப்பய.நாங் பேசிட்டா ரொம்ப மானக்கேடா ஆயிரும்” என
தொடக்கத்தில் வார்த்தைகளைப் பக்குவமாகத்தான்
பேசினேன்.ஆனால் கிழவியின் வேகம் கொஞ்சமும் குறையவே இல்லை.அவள் ஒரு முடிவோடுதான்
சண்டையைத் துவக்கி இருக்கிறாள்.ஆகவே அவள் தொட நினைக்கும் உச்சத்தைத் தொடாமல்
விடுவதாகத் தெரியவில்லை.
ஏண்டா
உங்க ஆத்தா ரொம்ப யோக்யமோடா!ஆத்தாளப் பேசுன ஒடன கோபம் பொத்துக்கிட்டு வருதோ!வயசான
கெழவனுக்கு வாக்கப்பட்டு அவங் எப்பச்சாவான்னு காத்திருந்தா.அவங் எங்கடா செத்தாங் இவதானடா
அவனக் கொன்னா.இப்போ இளவட்டப் பயகளாப் பாத்துப் பாத்துப் புடிக்கிறா.எவங் வாராங்
எவங் போறான்னு எல்லாக் கூத்தையும் நாங்களும் பாத்துக்கிட்டுத்தான இருக்கோம்.இந்தத்
தேவடியா பொலப்புத் தெரியாதாக்கும்.”என மீண்டும் கொடுமையான கடுஞ் சுடு சொற்களை
அள்ளி இறைத்தாள்.
என்
பொறுமை என்னையும் மீறி அறிவை இழந்தது.ஆத்திரம் யோசிக்க மறந்தது.நான் என்ன செய்ய
முயல்கிறேன் என்பது எனக்கேவிளங்கவில்லை.
கோபக்
கொதிப்பில் குணம் மாறியது.புத்தி கெட்டு கோட்டியன் போல் வெறி உச்சி
முட்டியது.விஷம் ஆனது என் வெகுளித்தனம்.என்னைக் கட்டுப்படுத்த இயலாத எனக்குள் ஒரு
மிருகத்தனம்.சிந்தை தொலைத்தேன்.அப்போது என்ன நடந்தது என்று இப்போது நினைத்தாலும்
புரியாத புதிராகவே உள்ளது.
அய்யய்யோ
அளவிட முடியாத அப்படியொரு வேகம்! அவ்வளவு பெரிய கல்லை நான் எப்படித்தான் ஒரு
அட்டைக்ககல்லை தூக்குவதுபோல் அலக்காகத் தூக்கிநேனோ தெரியவில்லை.ஆச்சரியமான
விளைவுதான் அது.யாரும் எதிர் பார்க்காத துயரம்.அப்படியே அந்தக் கல்லை கிழவியின்
மீது ஒரே போடாகப் போட்டுவிட்டேன்.
“அட
சண்டாளா!என்னையக் கொன்னுட்டயே”ன்னு பாவம்! கிழவி தரையில் சாய்ந்தாள்`
(தொடரும்)
அடுத்த
தொடர் 25/1/2014
.jpg)
No comments:
Post a Comment