Saturday, 11 January 2025

பொறுமையுடன் வாழ்க!

பொறுமையுடன் வாழ்க

பிழைக்கத் தானே  உலகம்.
உழைக்கத் தானே  உடலும்.
கவலைக் கென்ன தேவை.
கவனம் பண்ணு வாழ்வை.!

தன்பலம் எழுப்பிடு.
பின்புலம் மறந்திடு.
வெறும் பேச்சு விலக்கிடு.
பொறுப்பாச்சு புறப்படு.

வரவினை நினைவிடு.
செலவினைக் கணக்கிடு.
வீணான ஆடம்பரம்.
தானாளும் சங்கடம்.

திட்டமாய் அடியெடு.
எட்டுவதைக் குறியிடு
கிடைப்பதில் நிறைந்திடு.
அடைவுக்குள் அளவிடு.

நிலையினை உணர்ந்திடு
விலையினை தேர்ந்திடு
கடன்படா உரம் நடு
உடன்படு வரம்பொடு.

பெருமைக்கு மாவிடிப்பு.
வறுமைக்குள் மூழ்கடிப்பு.
பொறுமையுடன் வாழ்வது.
அருமையது தேர்வது.

கவிஞர்.கொ.பெ.பிச்சை யா.

No comments:

Post a Comment